ஆச்சர்யம் அளித்த வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின், உலக சுற்றுக்கு 11 ஆண்டுகளுக்குப் பின் முன்னேறியுள்ளது இந்திய அணி. சமீபத்தில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நடந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி மோதியது. இதில், ஒற்றையர் பிரிவு, மாற்று ஒற்றையர் பிரிவு போட்டிகளில் அசத்திய சோம்தேவ் தேவ்வர்மன் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகியோரும் சிறப்பாக செயல்பட இந்திய அணி 4-1 கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி உலக சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன் கடந்த 1998 ம் ஆண்டு டேவிஸ் கோப்பை உலக சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியிருந்தது....

இரானி கோப்பை: இன்று ஆரம்பம்

இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று துவங்குகிறது. இதில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. உள்ளூர் தொடர்களில் ஒன்றான 47வது இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நாக்பூரில் இன்று துவங்குகிறது. இதில் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, ரஞ்சி கோப்பை நடப்பு சாம்பியனான மும்பை அணியை சந்திக்கிறது. இது டெஸ்ட் கிரிக்கெட் போல ஐந்து நாட்கள் நடக்கும். வருகிறார் சேவக்: தோள்பட்டை காயம் காரணமாக, சமீபத்திய சர்வதேச தொடர்களில் பங்கேற்காத இந்திய அணியின் துவக்க வீரர் சேவக், இரானி கோப்பை தொடரில் பங்கேற்கிறார். இவர் "ரெஸ்ட் ஆப் இந்தியா' அணியின் கேப்டனாக...

யுவராஜ் இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பு

இந்திய அணியில் யுவராஜ் சிங் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறினார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுடன் தோல்வியுற்றதால் மட்டும் இந்தியாவை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு திறமை படைத்தது இந்திய அணி. தற்போதுள்ள நிலையில் போட்டியிலிருந்து இந்தியா வெளியேறியதாக கூறிவிட முடியாது. ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் முடிவில் மட்டுமே இந்தியாவுக்கு...

பாக்., வென்றால் இந்தியாவுக்கு மகிழ்ச்சி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. இன்று பிற்பகல் நடக்கும் முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்திய அணிக்கு மகிழ்ச்சி பிறக்கும். ஒருவேளை ஆஸ்திரேலியா வென்றால், இந்தியா வெளியேற நேரிடும். மாலையில் துவங்கும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மோதலும் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும். எனவே, பாகிஸ்தான் வெற்றியை பொறுத்து தான் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும். தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நாளை ஜோகனஸ்பர்கில் நடக்க உள்ள...

வீரர்கள் தேர்வில் தவறு: தோனி

ஐ.பி.எல்., தொடரில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறமையை அடிப்படையாக கொண்டு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்யக்கூடாது. இது தவறாகிவிடுகிறது,'' என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதில் யூசுப் பதான் உள்ளிட்ட சில வீரர்கள் பேட்டிங்கில் ஏமாற்றியது திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் வீரர்கள் தேர்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியது: உள்ளூர் மற்றும் ஐ.பி.எல்.,...

நியூஸிலாந்து வீரர் ரைடருக்கு அபராதம்

நியூஸிலாந்து வீரர் ஜெஸ்ஸி ரைடருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜோஹன்னஸ்பர்க்கில் இலங்கைக்கு எதிரான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 74 ரன்களைக் குவித்த ரைடர் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியனுக்குத் திரும்பிய வேளையில் டிரஸ்ஸிங் ரூமிலிருந்த நாற்காலியை தனது கிரிக்கெட் மட்டையால் உடைத்தார். இது சர்வதேச கிரிக்கெட் விதிகளை (ஐசிசி) மீறிய செயலாகும். இதைத் தொடர்ந்து ஜெஸ்ஸி ரைடருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் வாங்கிய ஊதியத்தில் இருந்து 15 சதவீத தொகையை அபராதமாக செலுத்தவேண்டும் என்று போட்டி நடுவர் ஜவகல்...

இந்தியா-ஆஸி., போட்டி மழையால் ரத்து

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின், நேற்றைய லீக் போட்டி மழையின் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த தொடரின் 9 வது லீக் போட்டியில், "ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. யூசுப் பதான், ஆர்.பி.சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அமித் மிஸ்ரா, பிரவீண் குமார்...

சாம்பியன்ஸ் டிராபி: இன்று இந்தியா-ஆஸி., மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய வாழ்வா... சாவா... போட்டியில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர் கொள்கிறது. தொடரின் அரையிறுதி வாய்ப்பை பெற, இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தோனி தலைமையிலான அணி களமிறங்குகிறது. சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. "ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்று இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. தோனி அதிர்ச்சி: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில்...

ஒருநாள் போட்டிக்கு ஆபத்து?

"டுவென்டி-20' போட்டிகளின் வரவிற்கு பின் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமல்ல ஒருநாள் போட்டிகளுக்கும் வரவேற்பு குறைந்துள்ளது. விரைவில் ஒருநாள் போட்டிகள் மறைந்து விடும் என அஞ்சப்படுகிறது. அவ்வளவு எளிதில் இது நடக்குமா அல்லது மீண்டும் எழுச்சி பெறுமா என்பது குறித்து பார்ப்போம். டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்பட்டு, குறிப்பிட்ட ஓவர்கள் கொண்டு விளையாடும் ஒருநாள் போட்டி முறை, 1962ல் கொண்டு வரப்பட்டது. அப்போது தலா 65 ஓவர்கள் கொண்ட போட்டியாக விளையாடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் முதன் முதலாக 1975ல் நடந்த உலக கோப்பை 60 ஓவர்கள் கொண்டதாக...

இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது. இது பகலிரவு ஆட்டமாக செஞ்சுரியன் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. டாûஸ வென்ற பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாக கம்ரன் அக்மலும், இம்ரான் நசீரும் களமிறங்கினர். ஆனால் இருவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நஸீர் 20 ரன்களிலும், கம்ரன் அக்மல் 19 ரன்களிலும் பெவிலியின் திரும்பினர். இந்த விக்கெட்டுகளையும் நெஹ்ரா வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து வந்த கேப்டன் யூனிஸ்கானை 20 ரன்களில்...

ஆஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடுவேன்: சேவாக்

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறினார். இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: அக்டோபர் 25-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒரு தினத் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்குள் நான் முழு உடல் தகுதியுடன் இந்திய அணியில் இடம்பெறுவேன். உடல்ரீதியாக நான் இன்னும் முழுதுமாக தயாராகவில்லை. பெüண்டரி எல்லையிலிருந்து என்னால் பந்தை எறியமுடியவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா தொடர் துவங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. அதற்குள் நான் தயாராகிவிடுவேன். இருப்பினும்...

சச்சின் விக்கெட்டே எனது இலக்கு: ஆமீர்

இந்தியாவுடனான ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டே எனது இலக்கு என பாகிஸ்தான் இளம் வீரர் முகமது ஆமீர் (18) கூறினார். ஜோஹன்னஸ்பர்கில் இருந்து ஆமீர் கூறியதாவது: சச்சின் உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அவரது விக்கெட்டை கைப்பற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். அதற்காக எப்படிப் பந்துவீசுவது என பயிற்சியும் எடுத்துள்ளேன். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது என்பது எனது கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மறக்க முடியாத சில ஆட்டங்களைப் பார்த்துள்ளேன். டெண்டுல்கருக்கு வாசிம் அக்ரம் எப்படி பந்துவீசினார் என்பதை விடியோவில் பார்த்து...