நிச்சயம் வெல்வோம்: கேப்டன் தோனி

குவாஹாட்டி போட்டியில் நிச்சயம் வெல்வோம் என்று இந்திய அணியின் கேப்டன் தோனி கூறினôர்.

குவாஹாட்டி மைதானத்தில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: ஹைதராபாத் போட்டியில் தோல்வி கண்டது ஏமாற்றமளிக்கிறது. இனி புதிதாக ஒரு தொடரில் ஆடுவது போல எண்ணிக் கொண்டு போட்டியைத் துவங்கவுள்ளேôம்.

இது வரை என்ன நடந்தது என்பது பற்றி கவலைப் படவில்லை. இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. அந்த இரண்டிலும் நிச்சயம் வெற் றி காண்போம்.

இந்திய அணி பேட்டிங், ஃபீல்டிங், பெüலிங்கில் வலுவாக உள்ளது. இதன் மூலம் எதிரணிக்கு நெருக்கடி தந்து வெற்றி காண் போம்.

தவறுகளைத் திருத்திக் கொண்டு புதிதாக எழுந்துள்ளேôம்.

ஹைதராபாத் ஆட்டத்தில் சச்சினும், ரெய்னôவும் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனெனில் 5 விக்கெட்டுகள் கையில் இருந்தன. மேலும் பேட்டிங் பவர் பிளேவும் இருந்தது.

இருந்தபோதும் நாங்கள் தோற்றேôம். அந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இதே தவறை மீண்டும் செய்ய மாட் டோம் என்றôர் அவர்

0 comments:

Post a Comment