ஆஸ்​தி​ரே​லிய அணிக்கு அப​ரா​தம்

நிர்​ண​யிக்​கப்​பட்ட நேரத்​தில் குறை​வான ஓவர்​களை வீசி​ய​தற்​காக ஆஸ்​தி​ரே​லிய கிரிக்​கெட் அணிக்கு அப​ரா​தம் விதிக்​கப்​பட்​டது.

இந்​திய,​ ஆஸ்​தி​ரே​லிய அணி​க​ளுக்கு இடை​யி​லான 4-வது சர்​வ​தேச ஒரு தின கிரிக்​கெட் ஆட்​டம் மொஹா​லி​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.

இதில் ஆஸ்​தி​ரே​லியா 24 ரன்​கள் வித்​தி​யா​சத்​தில் வெற்றி கண்​டது. போட்​டி​யில் இந்​திய இன்​னிங்​ஸின்​போது ஆஸ்​தி​ரே​லிய பந்​து​வீச்​சா​ளர்​கள் நிர்​ண​யிக்​கப்​பட்ட நேரத்​தில் குறை​வான ஓவர்​களை வீசி​யது தெரி​ய​வந்​தது.

இதை​ய​டுத்து ஆஸ்​தி​ரே​லிய அணிக்கு போட்டி நடு​வர் கிறிஸ் பிராட் அப​ரா​தம் விதித்​தார்.

போட்​டி​யில் விளை​யா​டு​வ​தற்​காக கேப்​டன் பெற்ற தொகையி​லி​ருந்து 20 சத​வீ​தத்​தை​யும்,​ வீரர்​கள் பெற்ற தொகையி​லி​ருந்து 10 சத​வீ​தத்​தை​யும் அப​ரா​த​மாக செலுத்​த​வேண்​டும் என்று பிராட் உத்​த​ர​விட்​டார்.

0 comments:

Post a Comment