கான்பூர் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகம்

இந்தியா & இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆடுகளம் ரன் குவிப்புக்கு மட்டுமே சாதகமாக இருந்ததால் சர்ச்சை எழும்பியது. இது போன்ற ஆடுகளங்களை அமைத்தால், டெஸ்ட் போட்டி விரைவில் அழிந்துவிடும் என்று பல வீரர்கள் கவலை தெரிவித்தனர். 

இந்நிலையில், கான்பூர் களம் குறித்து பராமரிப்பாளர் ஷிவ் குமார் நேற்று கூறுகையில், ‘கிரீன் பார்க் மைதான ஆடுகளம் முதல் இரண்டு நாட்களுக்கு ரன் குவிக்க ஏற்றதாக இருக்கும். பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைக்கும்’ என்றார்.

0 comments:

Post a Comment