முன்வரிசையில் ஆட டோனிக்கு இடமில்லை

இந்திய அணி கேப்டன் டோனி ஒருநாள் போட்டியில் 5-வது வீரராக ஆடுகிறார். அவர் இன்னும் முன்வரிசையில் ஆட வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியிருந்தார்.

இதை ஏற்க டோனி மறுத்து விட்டார். நாக்பூர் போட்டியில் அவர் 5-வது வீரராக களம் இறங்கி முத்திரை பதித்தார்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும் போது, இந்தியாவின் பேட்டிங் வரிசை தற்போது பலமாக உள்ளது. 5-வது வீரராக டோனி வருகிறார்.

இன்னும் முன்வரிசையில் விளையாட அவருக்கு இடமில்லை. இதனால் அவரை டாப் ஆர்டரில் விளையாடுமாறு கூற தேவையில்லை என்றார்

0 comments:

Post a Comment