முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் மரணம்


முன்னாள் ரயில்வே கிரிக்கெட் அணி மற்றும் சிறந்த முதல் தர கிரிக்கெட் வீரருமான ராஜா அலி (36) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக ராஜா இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் ஒரு குழந்தை உள்ளனர்.

இடக்கை ஆட்டக்காரரான இவர், ரஞ்சி மற்றும் இரானி கோப்பைகளை வென்ற ரயில்வே அணியில் இடம் பிடித்திருந்தார். 

87 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர், 9 சதங்கள் மற்றும் 22 அரை சதங்களுடன் 4,337 ரன்கள் எடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment