இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டி மைதானங்கள் மாற்றம்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.
 
வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி நடைபெறும்.
அதன்பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும்.
 
இந்நிலையில் வட இந்தியாவில் ஜனவரி மாதம் அதிக குளிர் இருக்கும். இதனால் அந்த காலநிலைக்கு ஏற்ப இரண்டு ஒரு நாள் போட்டிகளின் இடம், நேரத்தை பி.சி.சி.ஐ. மாற்றியுள்ளது.
 
அதாவது, ஜனவரி 23-ம் தேதி இரு அணிகளும் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த இப்போட்டி 12 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
 
இதேபோல் ஜனவரி 27-ல் நடைபெற உள்ள 5-வது ஒருநாள் போட்டி தர்மசாலாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பகல் ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும்.
 
இரு அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 11-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நடக்கிறது. 2-வது போட்டி கொச்சியிலும் (ஜன.15), 3-வது போட்டி ராஞ்சியிலும் (ஜன.19) பகலிரவு ஆட்டங்களாக நடைபெற உள்ளன.

0 comments:

Post a Comment