கவலை தரும் காம்பிர், சேவக் பார்ம்


காம்பிர், சேவக்கின் மோசமான "பார்ம்' கவலை அளிக்கிறது,'' என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வருத்தம் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர்கள் சேவக், காம்பிர். சமீபகாலமாக இவர்களது ஆட்டம் மோசமாக உள்ளது. 

வரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், கடினமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது குறித்து கபில் தேவ் கூறியது:
 காம்பிர், சேவக் திறமையான துவக்க வீரர்கள். 

இவர்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். எப்போது இது போன்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறதோ, அதை தக்க வைக்க வேண்டும். 

சிறந்த வீரர்களான இவர்கள், அணிக்காக மட்டுமன்றி, தங்கள் நலனுக்காகவும் ரன்கள் சேர்க்க வேண்டும். இல்லையெனில், இது மகிழ்ச்சி தரக்கூடியதாக அமையாது. 

சச்சின் ஜாம்பவான் வீரர். இவரது முடிவு குறித்து பேசமால் இருப்பது தான் நல்லது. அடுத்து என்ன செய்யப் போகிறேன் என்பதை, சமீபத்திய பேட்டியில் சச்சின் தெரிவித்து இருந்தார். 

தோனியை பொறுத்தவரை, கேப்டன் பணியில் நிறைய வெற்றிகள் கொடுத்து விட்டார். 2007 ("டுவென்டி-20'), 2011 (50 ஓவர்) என, இரண்டு உலக கோப்பை வென்று தந்துள்ளார். 

பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியை, டெஸ்ட் தரவரிசையில் அணியை "நம்பர்-1' இடத்துக்கு கொண்டு சென்றார். இதற்கு பின்பும், வெற்றி தேடித்தர வேண்டும் என, தோனியிடம் எதிர்பார்க்கக் கூடாது. 

அணித் தேர்வாளர்கள், ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இருப்பினும், அவர்களது அனைத்து செயல்களும், இந்திய அணியின் நன்மைக்காக இருக்கும் என்று நம்புகிறேன். 

யார், யாரை தேர்வு செய்வது என்பதெல்லாம் நிர்வாகத்தின் முடிவு. இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

0 comments:

Post a Comment