வெற்றியுடன் திரும்புகிறது சென்னை கிங்ஸ்


சாம்பியன்ஸ் லீக் தொடரில் யார்க்ஷயருக்கு எதிரான போட்டியில் சென்னை கிங்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடர் நடக்கிறது. நேற்று தங்களது கடைசி லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ், யார்க்ஷயர் அணிகள் மோதின. "டாஸ் வென்ற சென்னை கேப்டன் ரெய்னா, "பீல்டிங் தேர்வுசெய்தார். 

யார்க்ஷயர் அணிக்கு லித் (11), காலே (23) ஆறுதல் தந்தனர். மில்லர் 28 ரன்களில் அவுட்டான போதும், பேலன்ஸ் அரைசதம் (58) கடந்து அவுட்டானார். யார்க்ஷயர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. 

எளிய இலக்கைத் துரத்திய சென்னை கிங்சின் டுபிளசி (1), முரளிவிஜய் (13) நிலைக்கவில்லை. ரெய்னா (31), பத்ரிநாத் (47), தோனி (31) வெற்றியை உறுதி செய்தனர்.  சென்னை அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. 

0 comments:

Post a Comment