இங்கிலாந்து டெஸ்ட் - ரெய்னாவுக்கு பதில் யுவராஜ்சிங்


இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்த மாதம் கடைசியில் இருந்து டிசம்பர் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. 

வருகிற 30-ந்தேதி பயிற்சி ஆட்டம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 15-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 17-ந்தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது. 

20 ஓவர் போட்டி டிசம்பர் 20 மற்றும் 22-ந்தேதி வரை நடைபெறும். பின்னர் ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியா வந்து 5 ஒருநாள் போட்டியில் விளையாடும். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ்சிங் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புற்றுநோயில் இருந்து மீண்ட அவர் 20 ஓவர் உலக கோப்பையில் ஆடினார். துலீப் டிராபி போட்டியில் யுவராஜ்சிங் இரட்டை சதம் அடித்தார். அவர் 243 பந்துகளில் 208 ரன் (33 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். 

இந்த ஆட்டம் மூலம் அவர் டெஸ்ட் அணியில் தன்னை தேர்வு செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார். 

ரெய்னாவுக்கு பதிலாக யுவராஜ்சிங் டெஸ்ட் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. ரெய்னா 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு தான் ஏற்றவர் என்ற கருத்து நிலவுகிறது. 

சந்தீப்பட்டில் தலைமையிலான புதிய தேர்வு குழு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியை முதல் முறையாக தேர்வு செய்கிறது.

1 comments:

  1. புதிய தகவல்களுக்கு நன்றி....

    EllameyTamil.Com

    ReplyDelete