சதம் அடிப்பவர்கள் மட்டும் சிறந்த ஆட்டக்காரர் அல்ல


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியாவின் கவுதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி வருகின்றனர். இந்த ஜோடி எந்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் விளையாடியும் இந்த ஜோடி 26 ரன்களை மட்டுமே பெற்றது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

இந்நிலையில் அடுத்த மாதம் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோத உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில்  மாற்றம் செய்யப்பட வேண்டும் என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இதுநாள் வரை இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்காத கவுதம் கம்பீர் தற்போது மவுனம் கலைத்துள்ளார். அவர் கூறியதாவது:- 

சதம் அடிப்பவர்கள் மட்டுமே சிறந்த ஆட்டக்காரர்கள் என்ற அளவுகோலை வைத்து ஒருவரை எடைபோட கூடாது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 93 ரன்களையும், ஆஸ்திரேலியாவில் 85 ரன்களையும் நான் எடுத்துள்ளேன். 

இதுவரை நடந்த எல்லா டெஸ்ட் போட்டிகளிலும், நானும் ஷேவாக்கும் இணைந்து சராசரியாக 52 ரன்கள் எடுத்துள்ளோம். சர்சதேச கிரிக்கெட்டை பொருத்த வரை இந்த ரன் விகிதம் சிறப்பானது என்றே நான் கருதுகிறேன்.

இவ்வளவு காலமாக நடைபெற்ற எல்லா போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்களாக அரை சதத்துக்கு மேல் ரன் எடுத்துள்ளோம். ஒவ்வொரு முறையும் சதம் அடிப்பது முக்கியமல்ல. 

தொடக்க ஆட்டக்காரர்கள் நிறைய பேர் சதம் அடிக்க தவறியுள்ளனர். நான் சதம் அடிக்கவில்லை என்று குறை கூறுபவர்கள், மற்ற ஆட்டக்காரர்களின் புள்ளி விவரங்களையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 

0 comments:

Post a Comment