பயிற்சியில் திணறிய சேவக்


ரஞ்சிக் கோப்பை போட்டிக்கான வலைப்பயிற்சியில் சேவக் திணறியது பெரும் அதிர்ச்சி அளித்தது.

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. சமீப காலமாக இவரது ஆட்டம் எடுபடவில்லை. இவர்,டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. 

கடைசியாக 2010, நவ., 4ம் தேதி ஆமதாபாத்தில் நடந்த டெஸ்டில், நியூசிலாந்துக்கு எதிராக 173 ரன்கள் எடுத்தார். அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து தொடரில் இவரை தான் இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது. 

இந்நிலையில், வரும் நவ., 2ம் தேதி துவங்கும் உ.பி., அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் டில்லி அணியின் கேப்டனாக சேவக் களமிறங்குகிறார். 

நேற்று நடந்த வலைப்பயிற்சியில் இவர் பங்கேற்றார். அப்போது இஷாந்த் சர்மா, ஆஷிஷ் நெஹ்ரா பந்துகளை சமாளிக்க முடியாமல் தடுமாறினார். 

இதனைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உள்ளூர் பவுலர்கள் சிலரின் "பவுன்சரில்' திணறியது தான் அதிர்ச்சி அளித்தது. 

ரஞ்சிக் கோப்பை போட்டியில் இழந்த "பார்மை' சேவக் மீட்க தவறினால், இந்திய அணிக்கு பெரும் சிக்கல் ஏற்படலாம். 

0 comments:

Post a Comment