தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக்

இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கும்,'' என, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடர் முடிந்த பின் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' போட்டி நடக்கும். இதில் ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று இடம் பிடித்த அணிகள், தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவில் இருந்து இரண்டு மற்றும் நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீசில் இருந்து தலா ஒரு அணிகள் என மொத்தம் 12 அணிகள், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும்.

கடந்த ஆண்டு நடந்த முதல் தொடரில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. தற்போது இரண்டாவது தொடர் குறித்து, லலித் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக கோப்பை "டுவென்டி-20' மற்றும் இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை கிரிக்கெட் தென் ஆப்ரிக்கா (சி.எஸ்.ஏ.,) வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தவிர, இவ்வகை போட்டிகளுக்கு தென் ஆப்ரிக்காவில் நல்ல வரவேற்பும் உள்ளது. இப்போது இரண்டாவது சாம்பியன்ஸ் லீக் தொடரையும் நடத்த விருப்பம் தெரிவித்தது.

இதையடுத்து சி.எஸ்.ஏ.,யின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, இத்தொடர் வரும் செப்., 10 முதல் 26ம் தேதி வரை, தென் ஆப்ரிக்காவில் நடக்கும். இதில் சென்னை, மும்பை, பெங்களூரு தவிர, மற்ற அணிகள் மற்றும் போட்டி நடக்கும் இடங்கள் ஆகியவை, வரும் வாரத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment