ஐ.பி.எல். - பெங்களூரு ரசிகர்கள் ஆவேசம்

அரையிறுதிக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகளின், பணத்தை திருப்பித் தருவதில், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.

மூன்றாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டு அரையிறுதி போட்டிகள், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்க இருந்தது. ஆனால் லீக் போட்டியின் போது ஏற்பட்ட, குண்டு வெடிப்புகள் காரணமாக போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட்டது.


ஏற்கனவே 2 அரையிறுதிப் போட்டிக்குரிய டிக்கெட்டுகள், இங்கு விற்கப்பட்டுள்ளன. இதற்குரிய பணத்தை, மைதானத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை 10 மணி முதல், சின்னச்சாமி மைதானத்தின், 9 வது கவுன்டர் முன், நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூட்டம் கூடியது. அரை மணி நேரம் தாமதமாக 11 மணி முதல், பணம் திருப்பி வழங்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடிவிட்டது. இந்நிலையில் பண பற்றாக்குறை காரணமாக, அடுத்த அரைமணி நேரத்தில் கவுன்டர் மூடப்பட்டது.


இரண்டு போட்டிகளுக்காக, சுமார் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்ட நிலையில், ஒரு கவுன்டரில் மட்டும் பணம் வழங்கப்பட, ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று.

இதுகுறித்து பாண்டே என்பவர் கூறுகையில்,"" எனக்கு 50 டிக்கெட்டுக்குரிய, 63 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் திருப்பித்தர வேண்டும். ஆனால் அவர்கள் என்னை அலுவலகத்துக்கு செல்லுமாறு, அலைய விடுகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக இங்கு போட்டியை பார்த்து வரும் எனக்கு, இதுபோன்ற அனுபவம் இதற்கு முன் ஏற்பட்டதில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment