ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்

2-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. அப்போது மேட்ச்பிக்சிங் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.

ஆனால் அப்போது சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் சங்கம் மறுத்து உள்ளது.

ஆனால் ஐ.பி.எல். மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய வருமான வரி அதிகாரிகள் 2009 ஐ.பி.எல்.லில் சூதாட்டம் நடந்ததை கண்டு பிடித்து உள்ளனர்.

இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 27 வீரர்களும் அதிகாரி ஒருவரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் முன்னணி வீரர்கள் ஆவர். போட்டியில் ஆடிய மற்றும் ஆடாத வீரர்களுக்கும் இதில் பங்கு இருந்து உள்ளது.

இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் நிதிதுறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

எனவே 2009 ஐ.பி.எல். தொடர்பாக முழு விசாரணை நடத்தினால் மேட்ச் பிக்சிங் பற்றி நிறைய விஷயங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

0 comments:

Post a Comment