வார்னரை கவர்ந்த சேவக்

டுவென்டி-20' ஸ்பெஷலிஸ்ட் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை, இந்திய வீரர் சேவக் அதிகம் கவர்ந்துள்ளார்.

ஐ.பி.எல்., தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணியின் துவக்க வீரர்களாக, இந்தியாவின் அதிரடி வீரர் சேவக், ஆஸ்திரேலியாவின் வார்னர் விளையாடினர். இது இவர்கள் இடையே நட்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது சேவக், வார்னரிடம் கூறுகையில்,""நீங்கள் தேசத்துக்காக அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

அதாவது டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும். இதில் தான் அனைத்து விதமான வகையிலும் அடித்து விளையாடலாம். அப்போது ஒரு நாளில் நான் எடுத்த 284 ரன்கள் என்ற சாதனையை, 300 ரன்கள் எடுத்து, நீங்கள் முறியடிக்க வேண்டும் ,'' என்றார்.

சேவக்கின் இந்த கருத்துக்கள், வார்னரை அதிகம் கவர்ந்துள்ளது. இதுகுறித்து வார்னர் கூறியது:

சேவக் என்னிடம் கூறிய வார்த்தைகளை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டேன். இதை எனக்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டுள்ளேன். இப்போது அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இருப்பினும் எனக்கான காலம் வரும்வரை காத்திருப்பேன். தற்போதைய கேப்டன் பாண்டிங் தலைமையில், டெஸ்ட் போட்டியில் பங்கேற்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

ஐ.பி.எல்., போட்டிகள் முடிந்து, அடுத்து "டுவென்டி-20' உலக கோப்பை வெஸ்ட் இண்டீசில் துவங்குகிறது. அங்குள்ள ஆடுகளங்கள் தற்போது அதிகமாக "பவுன்ஸ்' ஆவதில்லை. எங்கள் அணியில் 150 கி.மீ.,க்கும் அதிக வேகத்தில் பவுலிங் செய்யக்கூடிய, நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

தவிர, நாதன் ஹாரிட்ஜ், ஸ்டீபன் ஸ்மித் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். "பார்ட் டைம்' ஸ்பின்னராக டேவிட் ஹசி, மைக்கேல் கிளார்க் கைகொடுப்பார்கள். இவர்களது பங்கு கரீபிய மண்ணில் அதிகம் தேவைப்படும். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்லும் என எண்ணுகிறேன்.

இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment