ஐ.பி.எல். - ரூ.51 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் மிகப்பெரிய அளவில் “பெட்டிங்” (சூதாட்டம்) நடைபெற்று உள்ளது.

எந்த அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லும், இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் எவை, அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை, ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருது யாருக்கு கிடைக்கும் என்பது, முதலில் பேட்டிங் செய்வது யார் என்பது உள்பட பல்வேறு வகைகளில் பெட்டிங் நடந்து உள்ளது.

மொத்தம் உள்ள 60 ஆட்டத்தில் ரூ. 51 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடை பெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு ஆட்டத்துக்கான சராசரி பெட்டிங் ரூ. 830 கோடியாகும்.

இறுதிப் போட்டியில் மும்பை அணிதான் வெற்றி பெறும் என்று அதிகமான பேர் பெட்டிங் கட்டி இருந்தனர். இதனால் சென்னை அணிக்காக “பெட்” கட்டி இருந்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்து இருக்கும்.

பெரும்பாலான புக்கிகள் (சூதாட்ட தரகர்கள்) சென்னை அணி வெற்றி பெற்றதை எதிர்பார்க்க வில்லை.

0 comments:

Post a Comment