ஐ.பி.எல்., விருது யாருக்கு?

ஐ.பி.எல்., விருதுக்கு முரளி விஜய், ராபின் உத்தப்பா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மும்பையில், வரும் 23ம் தேதி சகாரா நிறுவனம் சார்பில் ஐ.பி.எல். விருது வழங்கும் விழா நடக்கிறது. இதற்கு, லீக் சுற்றில் வீரர்களின் செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதில் 22 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் 10 விருதுக்கான வீரர்களை ஆறு பேர் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்யும்.

ஒவ்வொரு பிரிவிலும் ஒருவீரர் தேர்வு செய்யப்படுவார். முக்கிய பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள வீரர்களின் பட்டியல்:

சிறந்த பேட்ஸ்மேன்: காலிஸ், சச்சின், சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ராபின் <உத்தப்பா.

சிறந்த பவுலர்: ரியான் ஹாரிஸ், அஷ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன் சிங், வினய் குமார், ஜாகிர் கான்

சிறந்த அறிமுக வீரர்: மைக்கேல் லம்ப், அம்பாதி ராயுடு, போலார்டு, பசல், மோனிஷ் மிஸ்ரா, டெய்ட், போலிஞ்சர்.

சிறந்த பீல்டர்: ரெய்னா, போலார்டு, ஜூன்ஜூன்வாலா, டிவிலியர்ஸ், யூசுப் பதான், டேவிட் வார்னர்.

சிறந்த பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்: முரளி விஜய், உத்தப்பா, யூசுப் பதான், ஜுயன் திரான், டேவிட் வார்னர், ஹர்பஜன், வார்ன்.

சிறந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்: கில்கிறிஸ்ட், பிரண்டன் மெக்கலம், தன்வீர் (2008-09).

0 comments:

Post a Comment