சச்சின் "அட்வைஸ்' கைகொடுக்கும்

பெண்களுக்கான உலக கோப்பை ("டுவென்டி-20') தொடரில் சாதிக்க, சச்சின் வழங்கிய ஆலோசனை கைகொடுக்கும்,'' என இந்திய அணி கேப்டன் ஜுலான் கோஸ்வாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசில், பெண்களுக்கான "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணியினர் நேற்று, வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.

"பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வரும் மே 6ம் தேதி, தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இதற்கு முன் வரும் மே 2, 3ம் தேதிகளில் முறையே இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.

இத்தொடர் குறித்து இந்திய கேப்டன் கோஸ்வாமி கூறியதாவது: "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு உடல் மற்றும் மன ரீதியில் இந்திய வீராங்கனைகள் முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளனர்.

இதற்காக மும்பையில் நடந்த பயிற்சியின் போது, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆலோசனைகள் உலக கோப்பை தொடரில் சாதிக்க நிச்சயம் கைகொடுக்கும்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதி வரை முன்னேறியது. இத்தொடரில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, இம்முறை கோப்பை வெல்ல போராடுவோம்.

சமீபத்தில் இந்திய அணியின் பீல்டிங், மந்தமாக இருந்தது. இதற்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளதால் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இணையாக பீல்டிங்கில் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கோஸ்வாமி கூறினார்.

0 comments:

Post a Comment