பாட்மின்டனில் புதிய வரலாறு படைத்தார் காஷ்யப்

ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு இந்தியாவின் காஷ்யப், முன்னேறி சாதனை படைத்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 30வது ஒலிம்பிக் நடக்கிறது. இதன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் காஷ்யப், இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை 21-14 என காஷ்யப் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் சொதப்பிய இவர், 15-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அசத்திய காஷ்யப், 21-9 என வென்றார்.

முடிவில் 21-14, 15-21, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் காலிறுதிக்கு முன்னேறுவது இது தான் முதன் முறை.

0 comments:

Post a Comment