நியூசிலாந்து தொடருக்காக பயிற்சியை துவக்கினார் சச்சின்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, பயிற்சியை துவக்கினார் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் (ஆக., 23 முதல் செப்., 11 வரை), 2 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் வரும் ஆக., 23 முதல் 27 வரை நடக்கிறது.

இதனிடையே, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்குப் பின், இந்திய வீரர் சச்சின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு வேண்டும் என்பதற்காக, சச்சின் தானாக விலகினார். தற்போது நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறார்.

இதற்காக, நேற்று காலை சச்சின் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (என்.சி.ஏ.,) வந்தார். மதியம் என்.சி.ஏ., "பிசியோதெரபிஸ்டிடம்' நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.

பின், வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில், சச்சின் பேட்டிங் பயிற்சி செய்தார். கடந்த சில நாட்களாக இங்கு பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஜாகிர் கானை அழைத்து, தனக்கு பந்து வீசுமாறு கூறி, பயிற்சி செய்தார்.

0 comments:

Post a Comment