லட்சுமணுக்கு வெண்கலச் சிலை

லட்சுமண் மற்றும் அசாருக்கு வெண்கலச் சிலை வைக்க, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் (எச்.சி.ஏ.,) முடிவு செய்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் லட்சுமண். நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற நிலையில், திடீரென ஓய்வை அறிவித்தார். இவரை கவுரவிக்கும் வகையில், மைதானத்தின் ஒரு "பெவிலியன்' முனைக்கு, எச்.சி.ஏ., லட்சுமண் பெயரை வைத்தது.

இதனிடையே, இந்தியாவில் எந்த கிரிக்கெட் சங்கமும் செய்யாத ஒன்றை, எச்.சி.ஏ., செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, ஐதராபாத்தை சேர்ந்த லட்சுமண், அசாருக்கு வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்துள்ளது. எச்.சி.ஏ., செயலர் ஸ்ரீதர் கூறியது:

நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்ற லட்சுமண், அசாரை கவுரவிக்க, ஒரு மாதத்தில் சிலை வைக்கலாம் என்று திட்ட மிட்டுள்ளோம். இரண்டும் தலா 9 அடி உயரத்துடன், ரூ. 10 லட்சம் மதிப்புடையது.

2001ல் கோல்கட்டா டெஸ்டில் அசத்திய லட்சுமண், ஒரு கையில் "பேட்', மறு கையில் "ஹெல்மெட்டை' தூக்கி ரசிகர்கள் பாராட்டை ஏற்றார். இதுபோல சிலை செய்யப்படும். அசாருக்கு, இவரது வழக்கமான "ஆன்-டிரைவ்' "ஷாட்' அடிப்பது போல வைக்கப்படும்.

இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.

0 comments:

Post a Comment