இலங்கை டுவென்டி-20 தொடரில் மேட்ச் பிக்சிங்

இலங்கையில் நடக்கும் உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் "மேட்ச் பிக்சிங்' நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல்., போல, இலங்கை பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.,) "டுவென்டி-20' போட்டிகளை நடத்த, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) கடந்த ஆண்டு முயற்சித்தது. இந்திய வீரர்கள் விலகல் காரணமாக, கடைசியில் தொடர் ரத்தானது.

இம்முறை இந்திய வீரர்கள் இல்லாமல், கிறிஸ் கெய்ல், சாகிப் அல் ஹசன், அப்ரிதி போன்றவர்களை கொண்டு, தொடர் நடத்த திட்டமிட்டனர். காயம் காரணமாக கெய்ல், சாகிப் போன்றோர் கடைசி நேரத்தில் விலகினர்.

இதனிடையே, அங்கிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்' பத்திரிகைக்கு ஒரு "டேப்' ஒன்று வந்தது. இதில், எஸ்.எல்.பி.எல்., தொடரில் "மேட்ச் பிக்சிங்' செய்வது தொடர்பாக பேச்சுகள் பதிவாகியுள்ளதாம். பெரும்பாலும் இவை இந்தியில் இருப்பதால், முழு விவரத்தை அந்த பத்திரிகை வெளியிடவில்லை.

இந்த "டேப்', தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.எல்.சி.,யும் விசாரணை நடத்துகிறது என்றாலும், எவ்வித தகவலையும் தர மறுக்கின்றது.


தொடருக்கு பாதிப்பா:

கடந்த மூன்று நாட்களாக நடக்கும் போட்டிகளுக்கு, பெரியளவில் வரவேற்பு இல்லை. மைதானங்கள் காலியாக கிடக்கின்றன. இப்போது, "மேட்ச் பிக்சிங்' புகாரும் கிளம்பியது தொடரை அதிகமாக பாதிக்கும் என்று தெரிகிறது.


ஒன்றும் செய்யாது:

இதுகுறித்து தொடர் நிர்வாக அதிகாரி சந்தீப் பாம்மர் கூறுகையில்,"" ஊழல் புகாரால் தொடருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இது, ஊழல் தடுப்புக் கண்காணிப்புக் குழுவை எச்சரிக்கையாக இருக்க செய்யப்பட்ட ஏற்பாடாக கூட இருக்கலாம். தவிர, வெறும் புகார் தான். இதில் உறுதியில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment