சுஷில் குமாருக்கு சச்சின் பாராட்டு

லண்டன் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவருக்கு சச்சின், சேவக் உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் "டுவிட்டர்' இணையதளம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சச்சின்: நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள சுஷில் குமாரின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் விடாமுயற்சியை நினைத்து பெருமை அடைகிறோம்.

சேவக்: உலக சாம்பியனை போன்று மகத்தான மனவலிமையை சுஷில் குமார் வெளிப்படுத்தினார். இவர் வென்ற பதக்கத்தினால் பெருமை கொள்கிறோம்.

யுவராஜ் சிங்: தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சுஷில் குமார் பெற்றுள்ளார். இதன் மூலம் திறமையான வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

ரெய்னா: மல்யுத்தத்தில் சுஷில் குமார் வென்ற வெள்ளி ஒன்றும் தங்கத்தை விட குறைந்தது
கிடையாது. உடல் நலன் பாதிக்கப்பட்ட போதும், துணிச்சலாக போராடி பதக்கம் வென்றார்.

தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளார்.

0 comments:

Post a Comment