தோனியுடன் கருத்து வேறுபாடு இல்லை - லட்சுமண்

தோனியுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது'' என, லட்சுமண் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண், 37. இவர் திடீரென ஓய்வை அறிவித்தார்.

இதற்கு கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்பட்டது. லட்சுமண், சக வீரர்களுக்கு கொடுத்த "பார்ட்டிக்கு' தோனியை அழைக்காததால் பிரச்னை பெரிதானது.

இது குறித்து லட்சுமண் கூறியது:

தோனியுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. இதற்கு மேல் இதை பற்றி பேச விரும்பவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை, நேரில் பார்க்க நினைத்திருந்தேன். ஆனால் அதிக மழை காரணமாக செல்ல முடியவில்லை.

நான்காம் நாள் போட்டியை கூட காண வேண்டும் என்றிருந்தேன். என் இரண்டு குழந்தைகளும் காய்ச்சலால் அவதிப்பட்டனர். எனவேதான் நேரில் சென்று பார்க்கமுடியவில்லை.

இருப்பினும், "டிவி' யில் போட்டியை கண்டேன். வீரர்கள் சிறப்பாக விளையாடினர். தொடரையும் கைப்பற்றுவர். இவ்வாறு லட்சுமண் கூறினார்.

0 comments:

Post a Comment