அஷ்வின் சுழலில் பாலோ-ஆன் பெற்றது நியூசிலாந்து

ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் நீடிக்கிறது. அஷ்வின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டு "பாலோ-ஆன் பெற்றது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 106 ரன்கள் ரன்கள் எடுத்திருந்தது.


அஷ்வின் அபாரம்:

இன்று மூன்றாம் நாள் ஆட்டம், மோசமான வானிலை காரணமாக, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. பவுலிங்கில் இந்திய வீரர்கள் தொடர்ந்து அசத்தினர். வான் விக், "டக் அவுட்டானார். பிரேஸ்வெல் 17 ரன்கள் எடுத்தார்.

அடுத்து வந்த அஷ்வின் முதலில் ஜீதன் படேலை (10) வெளியேற்றினார். சிறிது நேரத்தில் பவுல்ட்டை (4) வெளியேற்றினார். அடுத்த பந்திலேயே மார்டினையும் "டக் அவுட் செய்தார்.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டது.

முதல் இன்னிங்சில் 279 ரன்கள் பின்தங்கிய நிலையில், தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடும் (பாலோ-ஆன்) நிலைக்கு நியூசிலாந்து தள்ளப்பட்டது. சுழலில் மிரட்டிய அஷ்வின் 6 விக்கெட் வீழ்த்தினார்.

மீண்டும் மழை:
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, கப்டில் விக்கெட்டை (16) விரைவில் இழந்தது. 41 ரன்னுக்கு 1 விக்கெட் என்ற நிலையில், மழை குறுக்கிட்டதால், மூன்றாவது நாள் ஆட்டம் ரத்தானது.

0 comments:

Post a Comment