வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் செய்னா நேவல்

ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவின் செய்னா நேவல், வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார். லண்டன் ஒலிம்பிக் பாட்மின்டனில், பெண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் வாங் ஜின்னை சந்தித்தார்.

இதன் முதல் செட்டில் செய்னா, 18----20 என, பின் தங்கியிருந்தார். அப்போது சீனா வீராங்கனை வாங் சின், முழங்காலில் காயம் அடைந்தார்.

சிகிச்சைக்குப் பின் திரும்பிய இவர், முதல் செட்டை 21-18 என, கைப்பற்றினார்.

ஆனால், தொடர்ந்து இரண்டாவது செட் துவங்கியதும், சீனா வீராங்கனை வாங் சின்னால் விளையாட முடியாததால், போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக வாங் சின் அறிவித்தார்.

இதையடுத்து இந்தியாவின் செய்னா நேவல், மூன்றாவது இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டு, வெண்கலப்பதக்கம் கைப்பற்றி, வரலாறு படைத்தார்.

0 comments:

Post a Comment