லட்சுமண் விவகாரம் - கங்குலி பல்டி

லட்சுமணுக்கு தோனி ஆதரவு தரவில்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. எனது கருத்தை "மீடியா' தவறாக வெளியிட்டுள்ளது,'' என, கங்குலி "பல்டி' அடித்துள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் வீரர் லட்சுமண், 37. கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்ற நிலையிலும், உடனடியாக ஓய்வு பெற்றது, எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

இதுகுறித்து கங்குலி கூறுகையில்,"" கேப்டன் தோனி, தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கொடுத்த நெருக்கடியால் தான் லட்சுமண் ஓய்வு பெற்றார். தவிர, லட்சுமணுக்கு தோனி ஆதரவு கொடுப்பதில்லை, இவரால், தோனியிடம் பேச முடியவில்லை,'' என்று தெரிவித்து இருந்தார்.

இப்போது, அப்படியே "பல்டி' அடித்துள்ளார் கங்குலி. முதலில் பேசியதை மறுத்து கங்குலி கூறியது:
கேப்டன் தோனியை லட்சுமணால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற செய்தி தவறான முறையில் வெளியாகியுள்ளது.

அதாவது, கிரிக்கெட்டில் அணித் தலைவர் என்பவர், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த இடத்தில் லட்சுமணுக்கு தோனியின் ஆதரவு கிடைக்கவில்லை என்று மறைமுகமாக குறிப்பிடவில்லை.

லட்சுமணின் சூழ்நிலை வேறாக இருந்திருக்கும். அவர் தோனியின் ஆதரவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment