லட்சுமண்-தோனி மோதல் தீவிரம்

லட்சுமண், தோனி இடையிலான "பனிப்போர்' நீடிக்கிறது. இருவரும் சந்திப்பதை தவிர்க்க, ஒரு விழாவே ரத்து செய்யப்பட்டது.

இந்திய டெஸ்ட் அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் லட்சுமண். நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற நிலையில், திடீரென ஓய்வை அறிவித்தார். கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான், இதற்கு காரணம் என பேசப்பட்டது.

தனது வீட்டில் விருந்து கொடுத்த லட்சுமண், சச்சின், சேவக், காம்பிர், ஜாகிர் கான் ஆகியோருடன்
தோனியை அழைக்காதது, இவர்கள் இடையிலான மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதனிடையே, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம், மைதானத்தின் ஒரு "பெவிலியன்' முனைக்கு லட்சுமண் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தது.

இதற்கான விழாவில் லட்சுமண் கலந்து கொள்ள, தோனி பெயர் பலகையை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடைசியில் என்ன நடந்ததோ தெரியவில்லை, இந்த விழாவே நடக்கவில்லை.

ஆனால், "பெவிலியன்' முனையில் முன்பு இருந்த பெயர் அழிக்கப்பட்டு, லட்சுமண் பெயர் அவசரம், அவசரமாக எழுதப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்த யாரும் பேச முன்வரவில்லை. இது, இவர்கள் இடையே ஏற்பட்ட பிளவை, மேலும் உறுதி செய்வது போல இருந்தது.

0 comments:

Post a Comment