சச்சினுக்கு எதிரான வழக்கு - மத்திய அரசுக்கு அவகாசம்

ராஜ்யசபா எம்.பி.,யாக சச்சின் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் கூடுதல் கால அவகாசம் அளித்தது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சமீபத்தில் இவர் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராம் கோபால் சிங் சிசோடியா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுத்தார்.

அதில்,"ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான எந்த தகுதியும் சச்சினுக்கு இல்லை. அரசியல் சாசன பிரிவு 80ன்படி கலை, அறிவியல், இலக்கியம், சமூக அறிவியல் ஆகிய நான்கின் கீழ் தான் ஒருவரை நியமனம் செய்ய முடியும்.

இந்நிலையில், விளையாட்டு வீரரை தேர்வு செய்தது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானது,என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி(பொறுப்பு)ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சகாய் ஆகியோர் அடங்கிய "பெஞ்ச் மத்திய அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வரும் செப்., 5ம் தேதி வரை கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

0 comments:

Post a Comment