சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தோனி படை தயார்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்கிறோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இது முடிந்தவுடன், இலங்கையில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

இதற்கான இந்திய அணியின் புதிய ஆடை அறிமுக விழா நடந்தது. இதில் பங்கேற்ற கேப்டன் தோனி கூறியது:

இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க, ஒவ்வொரு போட்டியின் போதும், அதிக இடைவெளி இருந்தது. தற்போது நீண்ட தொடரில் கலந்து கொள்ள மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகவுள்ளோம்.

யுவராஜ் சிங்கை "டிரெசிங் ரூமில் மிஸ்' பண்ணுகிறோம். இவரின் பணியை கோஹ்லி நிரப்பிவிட்டார். தற்போது மீண்டும் யுவராஜ் அணிக்கு திரும்பி இருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த புதிய ஆடை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடக்கும். இந்த ஆடையினால் ரன்கள் அதிகமாகுமா என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதிக வசதியாக உணர்கிறேன். ரசிகர்கள் "டிவி'யில் போட்டியை காணும் போது, வெள்ளை நிறத்தில் இருந்தால் டெஸ்ட் போட்டி என்றும், நீல நிறத்தில் இருந்தால் ஒரு நாள் போட்டி என்றும் கணிப்பார்கள்.

தற்போது இதன் மூலம் "டுவென்டி-20' போட்டி என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். மேலும் இந்த ஆடையில் மூவர்ணக் கொடியும் இடம்பெற்றுள்ளது. இது என் இதயத்தின் அருகில் உள்ளதால், கொஞ்சம் சிறப்பானது.

இவ்வாறு தோனி கூறினார்.

யுவராஜ் சிங் கூறுகையில்,""கடந்த இரண்டு மாதங்களாக கடினமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன் என நினைக்கவில்லை. இதை என் வாழ்வின் முதல் போட்டியாகத்தான் கருதுகிறேன்,'' என்றார்.

0 comments:

Post a Comment