டுவென்டி-20 உலக கோப்பை பயிற்சி - இந்தியா-பாக்., மோதல்

டுவென்டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான், இலங்கையை சந்திக்கிறது.

இலங்கையில் செப்., 18 முதல், அக்., 7 வரை உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான பயிற்சி போட்டிகள் 13ம் தேதி துவங்குகிறது.

இந்திய அணி, முதல் போட்டியில் இலங்கையை 15ம் தேதி கொழும்புவில் சந்திக்கிறது. அடுத்து 17ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா (செப்., 17), பாகிஸ்தானை (செப்., 19) சந்திக்கிறது.

அனைத்து பயிற்சி போட்டிகளும் கொழும்புவில் நடக்கவுள்ளன. இத்தொடர் நடக்கும் போது, பெண்கள் உலக கோப்பை "டுவென்டி-20' தொடரும் (செப்., 26 முதல் அக்., 7 வரை) இங்கு நடக்கிறது. இதற்கான பயிற்சி போட்டிகள் செப்., 22-23ல் நடக்கின்றன.

0 comments:

Post a Comment