இளம் இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

ஜூனியர் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர். இவர்களுக்கு மும்பை விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் சதம் அடித்த கேப்டன் உன்முக்த் சந்த் உள்ளிட்ட வீரர்கள் நேற்று மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

இவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

கேப்டன் உன்முக்த் சந்த் கூறுகையில்,""உலக கோப்பை தொடருக்கு செல்லும் முன், சச்சினுடன் அரைமணி நேரம் செலவிட்டோம். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. போட்டிகளின் போது எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார்.

என்னையும், தோனியையும் "மீடியா'தான் ஒப்பிட்டது. எனது இலக்கு பைனலில் வெற்று பெறுவது தான். அதனை எட்டியதில் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இந்திய "சீனியர்' அணியில் இடம்பெற இன்னும் அதிக காலம் உள்ளது. அடுத்து நியூசிலாந்து "ஏ' அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளேன். அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்,''என்றார்.

1 comments:

  1. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    ReplyDelete