"சாம்பியன்' யுவராஜ் நல்ல உதாரணம் - சச்சின்

கடின சிகிச்சைக்கு பின் மிக விரைவாக மீண்ட யுவராஜ், இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இவர் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி கேன்சரால் பாதிக்கப்பட்ட சாமான்ய மனிதர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்,'' என, சச்சின் தெரிவித்தார்.இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 30. கடந்த ஆண்டில் நுரையீரலில் ஏற்பட்ட கேன்சர் கட்டிக்காக "கீமோதெரபி' சிகிச்சை மேற்கொண்டார். இதிலிருந்து விரைவாக மீண்ட இவர், கடின பயிற்சியில் ஈடுபட்டார். இலங்கையில் அடுத்த மாதம் நடக்கவுள்ள...

ஓய்வு பெறும் திட்டம் இப்போது இல்லை - தெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சீனியர் வீரர் தெண்டுல்கர். 1989-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான அவர் 23 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். 189 டெஸ்டில் விளையாடி 15,489 ரன்னும், 463 ஒருநாள் போட்டியில் 18,426 ரன்னும் எடுத்துள்ளனர். டெஸ்டில் 51 சதமும், ஒருநாள் போட்டியில் 49 சதமும் அடித்துள்ளார். இதில் எல்லாமே அவர்தான் உலக சாதனையாளர் ஆவார். டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த லட்சுமண், டிராவிட் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இதனால் 39 வயதான...

இளம் இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

ஜூனியர் உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர். இவர்களுக்கு மும்பை விமான நிலையத்தில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் சதம் அடித்த கேப்டன் உன்முக்த் சந்த் உள்ளிட்ட வீரர்கள் நேற்று மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. கேப்டன் உன்முக்த் சந்த் கூறுகையில்,""உலக கோப்பை தொடருக்கு...

முதல் பந்தை சந்திக்க பயமா? - மனம் திறக்கிறார் சேவக்

கிரிக்கெட் போட்டிகளில் துணிச்சலாக "பேட்' செய்யும் சேவக்கிற்கு, முதல் பந்தை சந்திக்கும் போது பதட்டமாக இருக்குமாம்.இந்திய அணியின் துவக்க வீரர் சேவக். அதிரடி ஆட்டத்தில் கில்லாடியான இவர், பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விடுவது வழக்கம். இவருக்கும் களத்தில் இருக்கும் போது பதட்டம் ஏற்படுவதுண்டு. இதுகுறித்து சேவக் கூறியது: ஒவ்வொரு போட்டியிலும் முதல் பந்தை சந்திக்கும் போது மனதில் லேசான நடுக்கம் இருக்கும். அப்போது எனது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்புது போன்ற...

தோனியுடன் கருத்து வேறுபாடு இல்லை - லட்சுமண்

தோனியுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது'' என, லட்சுமண் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண், 37. இவர் திடீரென ஓய்வை அறிவித்தார். இதற்கு கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்பட்டது. லட்சுமண், சக வீரர்களுக்கு கொடுத்த "பார்ட்டிக்கு' தோனியை அழைக்காததால் பிரச்னை பெரிதானது. இது குறித்து லட்சுமண் கூறியது: தோனியுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. இதற்கு மேல் இதை பற்றி பேச விரும்பவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல்...

ஜுனியர் உலககோப்பையில் சாதித்தவர்கள்

ஆஸ்திரேலியாவில் நடந்த 19 வயதுக்குடப்ட்ட (இளைஞர்) கிரிக்கெட் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. இளைஞர் உலக கோப்பையை இந்தியா 3-வது முறையாக கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு கயூப் தலைமையிலும், 2008-ம் ஆண்டு வீராட் கோலி தலைமையிலும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.இளைஞர் உலக கோப்பை வென்ற வீரர்களில் 9 பேர் இந்திய சீனியர் அணியில் ஆடி உள்ளனர்.அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-யுவராஜ்சிங், முகமது கயூப், அஜய் ரத்ரா, வேணு கோபாலராவ், ரிதேந்தர்...

சீனியரை மிஞ்சிய ஜூனியர்அணிக்கு ஓ போடு

ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இந்தியா இன்று 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த வெற்றிக்கு உலகம் முழுவதும் கிரிக்‌கெட் ரசிகர்கள் வாழ்த்தும், மகிழ்ச்சியும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இன்று நடந்த பைனலில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் கேப்டன் வில்லியம் போசஸ்டோ 87 ரன்கள் எடுத்தார்....

லட்சுமணுக்கு வெண்கலச் சிலை

லட்சுமண் மற்றும் அசாருக்கு வெண்கலச் சிலை வைக்க, ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் (எச்.சி.ஏ.,) முடிவு செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் லட்சுமண். நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற நிலையில், திடீரென ஓய்வை அறிவித்தார். இவரை கவுரவிக்கும் வகையில், மைதானத்தின் ஒரு "பெவிலியன்' முனைக்கு, எச்.சி.ஏ., லட்சுமண் பெயரை வைத்தது. இதனிடையே, இந்தியாவில் எந்த கிரிக்கெட் சங்கமும் செய்யாத ஒன்றை, எச்.சி.ஏ., செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது, ஐதராபாத்தை சேர்ந்த...

அஷ்வின் சுழலில் பாலோ-ஆன் பெற்றது நியூசிலாந்து

ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம் நீடிக்கிறது. அஷ்வின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு சுருண்டு "பாலோ-ஆன் பெற்றது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 106 ரன்கள் ரன்கள் எடுத்திருந்தது. அஷ்வின்...

லட்சுமண்-தோனி மோதல் தீவிரம்

லட்சுமண், தோனி இடையிலான "பனிப்போர்' நீடிக்கிறது. இருவரும் சந்திப்பதை தவிர்க்க, ஒரு விழாவே ரத்து செய்யப்பட்டது.இந்திய டெஸ்ட் அணியின் "மிடில் ஆர்டர்' வீரர் லட்சுமண். நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற நிலையில், திடீரென ஓய்வை அறிவித்தார். கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான், இதற்கு காரணம் என பேசப்பட்டது. தனது வீட்டில் விருந்து கொடுத்த லட்சுமண், சச்சின், சேவக், காம்பிர், ஜாகிர் கான் ஆகியோருடன் தோனியை அழைக்காதது, இவர்கள் இடையிலான மோதலை வெளிச்சம் போட்டுக்...

டெக்கான் அணி நீக்கப்படுமா?

வீரர்களுக்கு சம்பளம் வழங்குவது உட்பட நிதி குளறுபடிகளை சரி செய்யாவிட்டால், டெக்கான் சார்ஜர்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயங்க மாட்டோம்,'' என, பி.சி.சி.ஐ., எச்சரித்துள்ளது.முதன் முதலாக நடந்த ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரில், 8 அணிகள் பங்கேற்றன. பின், இந்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இதில், கொச்சி அணியின் நிர்வாக குளறுபடியால், இதன் ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரத்து செய்தது. இப்போது டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் நிதி குளறுபடி ஏற்பட்டுள்ளது....

சச்சினுக்கு எதிரான வழக்கு - மத்திய அரசுக்கு அவகாசம்

ராஜ்யசபா எம்.பி.,யாக சச்சின் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் கூடுதல் கால அவகாசம் அளித்தது.இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். சமீபத்தில் இவர் ராஜ்யசபா எம்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராம் கோபால் சிங் சிசோடியா என்பவர் டில்லி ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடுத்தார். அதில்,"ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான எந்த தகுதியும் சச்சினுக்கு இல்லை. அரசியல்...

டிராவிட், லட்சுமண் இல்லாமல் டெஸ்டில் சாதிக்குமா இந்தியா

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் துவங்குகிறது. இதில், சீனியர் வீரர்கள் டிராவிட், லட்சுமண் இல்லாமல் இந்தியா களமிறங்குகிறது. இவர்களது ஓய்வு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது இளம் வீரர்கள் சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த, இந்திய அணி "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது. இதன் பின் இந்திய அணிக்கு வீழ்ச்சி தான். பின் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி அங்கும் தோற்க,...

லட்சுமண் விவகாரம் - கங்குலி பல்டி

லட்சுமணுக்கு தோனி ஆதரவு தரவில்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. எனது கருத்தை "மீடியா' தவறாக வெளியிட்டுள்ளது,'' என, கங்குலி "பல்டி' அடித்துள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் வீரர் லட்சுமண், 37. கடந்த சில நாட்களுக்கு முன், திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்ற நிலையிலும், உடனடியாக ஓய்வு பெற்றது, எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. இதுகுறித்து கங்குலி கூறுகையில்,"" கேப்டன் தோனி, தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்...

கை கால்களை இழந்தவர் நீச்சலில் சாதனை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீரர் பிலிப்குரோஸ்கான். கடந்த 1994-ம் ஆண்டு நடந்த மின் விபத்தில் இவர் தனது கை, கால்களை இழந்தார். அப்போது அவரது வயது 26. இருந்தும் அவர் மனம் தளராமல் பெடல் போன்ற செயற்கை உறுப்புகளை மாட்டிக் கொண்டு நீச்சல் பயிற்சி பெற்றார். அதன் மூலம் 'இங்கிலீஷ் கால்வாய்', செங்கடல் போன்றவற்றை நீந்தி கடந்தார். இருந்தும், அமெரிக்காவின் அலாஸ்காவில் இருந்து ரஷியாவுக்கு கடலில் நீந்தி கடக்க திட்டமிட்டிருந்தார். அதன்படி அலாஸ்காவில் உள்ள லிட்டில்...

எதில் சச்சின் ரொம்ப வீக்

கிரிக்கெட் அரங்கில் "மாஸ்டர் பேட்ஸ்மேனாக' திகழும் இந்தியாவின் சச்சின், செஸ் விளையாட்டில் ரொம்ப "வீக்'. செஸ் போட்டிகளில் தான் அதிக தோல்விகளை சந்தித்துள்ளாராம். இது குறித்து சச்சின் கூறியது: வீட்டில் என் சகோதரருடன் செஸ் விளையாடியிருக்கிறேன். ஆனால், நல்ல முடிவு வந்ததில்லை. பெரும்பாலான சமயங்களில் தோற்றுவிடுவேன். என் குடும்பத்திற்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தியது மாமாதான். இவர் இந்த விளையாட்டை பற்றி புத்தகம் கூட எழுதியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு...

லட்சுமணின் டாப் 5 செஞ்சூரி

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களின் ஒருவரான வி.வி.எஸ்.லட்சுமண் ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். அவர் 134 டெஸ்டில் 8,781 ரன் எடுத்துள்ளார். சராசரி 45.97 ஆகும். 17 சதமும், 50 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 281 ரன் குவித்தார். 86 ஒருநாள் போட்டியில் விளையாடி 2338 ரன் எடுத்துள்ளார். சராசரி 30.76 ஆகும். 6 சதமும், 10 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 131 ஆகும். நெருக்கடியான நேரங்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை மீட்டு பெருமை சேர்த்தவர்...

டுவென்டி-20 உலக கோப்பை பயிற்சி - இந்தியா-பாக்., மோதல்

டுவென்டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான், இலங்கையை சந்திக்கிறது.இலங்கையில் செப்., 18 முதல், அக்., 7 வரை உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான பயிற்சி போட்டிகள் 13ம் தேதி துவங்குகிறது. இந்திய அணி, முதல் போட்டியில் இலங்கையை 15ம் தேதி கொழும்புவில் சந்திக்கிறது. அடுத்து 17ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியா (செப்., 17), பாகிஸ்தானை (செப்., 19) சந்திக்கிறது. அனைத்து பயிற்சி போட்டிகளும்...

புதிய தொழிலில் குதிக்கிறார் டோனி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சர்வதேச அளவில் புதிய தொழிலில் குதிக்கிறார். உடலில் நீண்ட நேரம் நறுமணத்தையும், புத்துணர்ச்சியையும் தரும் ஆண்களுக்கான வாசனை திரவியம் (சென்ட்) விற்பனையை, துபாய் நிறுவனத்துடன் இணைந்து தொடங்குகிறார். முதலில் இந்தியா அதன் பிறகு அரபு நாடுகள், பிறகு உலகின் மற்ற இடங்களுக்கும் அவரது நிறுவனம் தொடங்கப்படும்.அடுத்த மாதம் இலங்கையில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, டோனி நிறுவனத்தின் சென்ட்டுகள் இந்திய மார்க்கெட்டுகளில்...

சர்வதேச கிரிக்கெட் - ஓய்வு முடிவில் லட்சுமண்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து லட்சுமண் ஓய்வு பெறத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்திய டெஸ்ட் அணியில் "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன் லட்சுமண், 37. கடந்த 1996ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 134 டெஸ்டில், 17 சதம், 56 அரைசதம் உட்பட 8781 ரன்கள் எடுத்துள்ளார். பெரும்பாலான டெஸ்டில், நான்காவது இன்னிங்சில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்துள்ளார்."நான்காவது...

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தோனி படை தயார்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்கிறோம்,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இது முடிந்தவுடன், இலங்கையில் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியின் புதிய ஆடை அறிமுக விழா நடந்தது. இதில் பங்கேற்ற கேப்டன் தோனி கூறியது: இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்க, ஒவ்வொரு போட்டியின் போதும், அதிக இடைவெளி இருந்தது....

நியூசிலாந்து தொடருக்காக பயிற்சியை துவக்கினார் சச்சின்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, பயிற்சியை துவக்கினார் இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின்.இந்தியா வரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் (ஆக., 23 முதல் செப்., 11 வரை), 2 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் வரும் ஆக., 23 முதல் 27 வரை நடக்கிறது. இதனிடையே, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்குப் பின், இந்திய வீரர் சச்சின் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு...

இலங்கை டுவென்டி-20 தொடரில் மேட்ச் பிக்சிங்

இலங்கையில் நடக்கும் உள்ளூர் "டுவென்டி-20' போட்டிகளில் "மேட்ச் பிக்சிங்' நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல்., போல, இலங்கை பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.,) "டுவென்டி-20' போட்டிகளை நடத்த, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி.,) கடந்த ஆண்டு முயற்சித்தது. இந்திய வீரர்கள் விலகல் காரணமாக, கடைசியில் தொடர் ரத்தானது. இம்முறை இந்திய வீரர்கள் இல்லாமல், கிறிஸ் கெய்ல், சாகிப் அல் ஹசன், அப்ரிதி போன்றவர்களை கொண்டு, தொடர் நடத்த திட்டமிட்டனர். காயம் காரணமாக கெய்ல்,...