ரிச்சர்ட்ஸ் போல் இன்னும் அதிரடியாக ஆடவில்லை: ஷேவாக்

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவரது ஆட்டம் முத்திரை பதிப்பதாக இருந்தது.

இலங்கைக்கு எதிரான மும்பை டெஸ்டில் 293 ரன் குவித்து தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடுவதால் ஷேவாக் அடுத்த ரிச்சர்ட்ஸ் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேவாக் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடியாக விளையாடுவதில் வல்லவர். அவர் பிதாமகன் நான் இன்னும் ரிச்சர்ட்ஸ் போல் அதிரடியாக விளையாடியது இல்லை. அவருடன் என்னை ஒப்பிட இயலாது.

10 ஆண்டுகளின் சிறந்த பேட்ஸ்மேனாக நான் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.

இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறந்ததாக இருந்தது. 2007-ம் ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதன் பிறகு திறமையை நிரூபித்து அணியில் நுழைந்தேன். இந்த ஆண்டில் 293 ரன் எடுத்தது சிறப்பானதாகும். அடுத்த ஆண்டிலும் எனது சிறப்பான ஆட்டம் தொடரும்.

இந்தியா தற்போது தலை சிறந்த அணியாக திகழ்கிறது. டெஸ்டில் “நம்பர்-1” இடத்திலும், ஒரு நாள் போட்டியில் 2-வது இடத்திலும் உள்ளோம். ஒரு நாள் போட்டியிலும் நம்பர் 1 இடத்தை பிடிக்க கூடிய திறமை இருக்கிறது.

தற்காலிக கேப்டன் பதவியில் மகிழ்ச்சியாக இருந்தேன். டோனி தான் கேப்டன். கேப்டன் பதவியில் அவர் சிறப்பாக செயலாற்றுகிறார். இந்திய அணியினர் சிறப்பான செயல்பாடுக்கு பயிற்சியாளர் கிர்ஸ்டனும் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment