4வது ஒருநாள் போட்டி: இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது

இந்தியா இலங்கை மோதும் 4-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இலங்கை அணியில் ஜெயசூர்யா, பெரேரா, லக்மல் சேர்க்கப்ட்டனர். இந்தியா அணியில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக கோக்லி சேர்க்கப்ட்டார்.

டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தில்சானும் தாரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். முதல் மூன்று போட்டியை போல் இந்த போட்டியில் இலங்கை வீரர்களால் முதலில் அடித்த விளையாட முடியவில்லை.

ஜாகீர்கான் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இலங்கை அணி 8 ஓவரில் 31 ரன் எடுத்திருக்கும்போது தில்சான் 9 ரன்னில் நெக்ரா பந்தில் அவுட் ஆனார்.

இந்த ரன்னை தில்சான் 19 பந்தில் எடுத்தார். அடுத்து தாரங்காவுடன் ஜெயசூர்யா ஜோடி சேர்ந்தார். 11 ஓவரில் இலங்கை அணி 48 ரன் எடுத்திருந்தது. அடுத்து 12வது ஓவரை இ.சர்மா வீசினார். அந்த ஓவரில் தாரங்கா 5 பவுண்டரி அடித்து விலாசினார்.

அடுத்த ஓவரில் ஜெயசூர்யா 15 ரன்னில் ஜாகீர்கான் பந்தில் அவுட் அனார். அடுத்து சங்ககரா தாரங்காவுடன் ஜோடி சேர்ந்தார். சங்ககரா ரன் ஏதும் எடுக்காமல் இருந்தபோது இ.சர்மா பந்தில் ஹர்பஜன் கொடுத்த கேட்சைப் பிடிக்க தவறினார். இதனால் டக் அவுட்டில் இருந்து சங்ககரா தப்பினார்.

அதன் பின் இருவரும் அடித்து விளையாடினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 76 ரன்னாக இருக்கும்போது தாரங்கா 9 பவுண்டரி1 சிக்சருடன் 50 ரன்னை கடந்தார். இலங்கை அணி 17.1 ஓவரில் 100 ரன்னை கடந்தது. 33.4 ஓவரில் ஸ்கோர் 183 ரன்னாக இருக்கும்போது தாரங்கா சதம் அடித்தார். சங்ககரா 60 ரன் எடுத்து அவுட் ஆனார்.

42.1 ஓவரில் 234 ரன் இருக்கம்போது தாரங்கா 118 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் இலங்கை அணி 49.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 307 ரன் எடுத்திருக்கும்போது லைட் பிரச்சனையில் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் ஆட்டம் தொடங்கியது. குறிப்பிட்ட 50 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன் எடுத்தது.


பின்னர் 316 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்கத்திலே இந்தியாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியா 23 ரன் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டை இழந்தது. சேவாக் 10 ரன்னிலும் சச்சின் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.


இருவருடைய விக்கெட்டையும் லக்மால் கைப்பற்றினார். அடுத்து காம்பீர் வீரட் கோக்லி தடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். அதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. 15.3 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 100ஐ தாண்டியது.

நிதானமாக விளையாடிய காம்பீரும் கோக்லியும் அரைசதம் அடித்தனர். கோக்லி 110 பந்தில் சதமும் காம்பீர் 101 பந்தில் சதமும் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 48.0 ஓவரில் 313 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றது. கடைசியில் மேட்ச்சியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை

0 comments:

Post a Comment