விலகினார் சச்சின் - இந்திய அணி அறிவிப்பு

வங்கதேசத்தில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


இந்தியா, இலங்கை, வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜன. 4 ம் தேதி வங்கதேசத்தில் துவங்குகிறது. இத்தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


சச்சினுக்கு ஓய்வு: இத்தொடரில் விலகுவதாக சச்சின் அறிவித்துள்ளார். இவருக்குப் பதில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பன்றிக் காய்ச்சல் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த், முத்தரப்பு தொடருக்கு தேர்வாகி உள்ளார்.


மீண்டும் தோனி: இலங்கை அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. தாமதமாக பந்து வீசியது தொடர்பாக 2 போட்டிகளில் தடையை எதிர்கொண்ட தோனி, மீண்டும் இப்போட்டியில் கேப்டன் பொறுப்பேற்கிறார். அசோக் டின்டா புதிதாக வாய்ப்பு பெற்றுள்ளார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை.


முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி: தோனி (கேப்டன்), சேவக், காம்பிர், யுவராஜ், கோஹ்லி, ரெய்னா, ரோகித் சர்மா, ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர், நெஹ்ரா, தியாகி, தினேஷ் கார்த்திக், ஸ்ரீசாந்த், அசோக் டின்டா மற்றும் அமித் மிஸ்ரா

0 comments:

Post a Comment