இந்தியாவில் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி ரத்து

இந்தியாவில் நடை பெற இருக்கும் தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதாக இருந்தது.

இதில் டெஸ்ட் போட்டியை மட்டும் ரத்து செய்து விட்ட தாக தென்ஆப்பிரிக்கா அறிவித்து உள்ளது.இதுபற்றி தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கதலைமை நிர்வாகி ஜெரால்டு மஜோலா கூறியதாவது:-

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஐ.பி.எல். போட்டிகள் இருக்கின்றன. அதிக போட்டிகள் இருப்பதால் வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படும்.எனவே இந்தியாவில் நடக்க இருந்த டெஸ்ட் போட்டிகளை மட்டும் ரத்து செய்ய விரும்பினோம். இதை இந்திய சங்கத்திடம் தெரிவித்தோம். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

எனவே டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடுவோம்.ஆனால் அடுத்த ஆண்டில் நேரம் கிடைக்கும்போது இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் ஆடுவோம். இதுபற்றி பின்னர் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

0 comments:

Post a Comment