இந்திய அணி ஆட மறுத்ததால் பாக். கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.230 கோடி நஷ்டம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவதாக இருந்தது. ஆனால் மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. இதன் காரணமாக போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ.230 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க தணிக்கைத்துறை கூறி உள்ளது.

டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமத்தில் மட்டும் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. மற்ற வகை விளம்பரங்கள் போன்றவற்றின் மூலம் ரூ.30 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் நடத்த இருந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்தாமல் போனதாலும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதேபோல அடுத்து பாகிஸ்தானில் நடத்த இருந்த உலககோப்பை போட்டிகள் சிலவும் ரத்து ஆனது. இதனாலும் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

சாம்பியன் கோப்பை, உலக கோப்பை போட்டி ரத்தால் சர்வதேச கிரிக்கெட் சங்கம் பாகிஸ்தானுக்கு ரூ.55 கோடி நஷ்டஈடு வழங்க இருக்கிறது.

0 comments:

Post a Comment