உலக சாதனையை தவறவிட்டார் சேவாக்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது முறை மூன்று சதம் அடித்து உலக சாதனை படைக்கும் வாய்ப்பை 7 ரன்களில் நழுவ விட்டார் இந்திய வீரர் வீரேந்திர சேவாக்.

293 ரன்கள் எடுத்த நிலையில் முத்தையா முரளிதரன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து சேவாக் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய வீரர் டொனால்டு பிராட்மன் மற்றும் மேற்கிந்தித் தீவுகள் வீரர் பிரையன் லாரா ஆகியோர் இரண்டு முறை 300 ரன்கள் எடுத்துள்ளனர்.

சேவாக் இதற்கு முன்பு 2008ல் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்திலும், 2004ல் முல்டானில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் 300 ரன்கள் எடுத்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் மூன்று முறை 300 ரன்கள் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment