இந்திய வீரர்கள் தேர்வு சரியில்லை

இந்திய வீரர்களின் தேர்வு முறை சரியில்லை என்று துலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

இந்திய அணி வீரர்கள் மிகவும் களைப்புடன் இருக்கிறார்கள். 15 பேர் கொண்ட அணியில் பெரும்பாலும் எல்லா போட்டியிலும் ஒரே மாதிரியாக 11 வீரர்களும் இடம் பெறுகிறார்கள். இதனால் அவர்கள் களைப்பாகி விடுகிறார்கள். உடல் தகுதி பிரச்சினையும் ஏற்படுகிறது.

மோசமான பீல்டிங்கும் ஏற்படுகிறது. இதற்கு தேர்வு முறை சரியில்லாததுதான் காரணம். அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சு சரியில்லாத போது அணியில் உள்ள சுதிப் தியாகிக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை.

வெற்றி வீரர்களை மாற்றுமாறு நான் சொல்லவில்லை. மாற்று வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. அவர்கள் பயணம் செய்து பெஞ்சில் அமர்வதற்காகவா தேர்வு செய்யப்பட்டார்கள். தியாகி, ஒஜா திறமையானவர்கள் இல்லையா? புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ள தியாகி, ஒஜா இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment