இந்திய அணிக்கு மூணாறில் பயிற்சி

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய "சைக்கிளிங்' அணியினருக்கு, மூணாறில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில் புதுடில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் பங்குபெறும் இந்திய அணியினர் மூணாறில் பயிற்சியை துவக்கியுள்ளனர்.


அணியில் நான்கு பெண்கள் உட்பட 24 பேர் இடம் பெற்றுள்ளனர். தினமும் 100 கி.மீ., தூரம் செல்கின்றனர். ஜனவரி 31 வரை மூணாறில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பின், இந்த அணியினர் பயிற்சிக்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைக்கிளிங் ஒலிம்பிக்வீரர் கிரகாம் சிஸ் பயிற்சியளித்து வருகிறார். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தெற்கு மண்டல பிரிவினர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்துஉள்ளனர். வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தும் சைக்கிளின் விலை இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை உள்ளது.


மூணாறில்நிலவும் பருவநிலை பயிற்சிக்கு ஏற்றதாக உள்ளதால் இங்கு பயிற்சியளிப் பதாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தெற்கு மண்டல துணை இயக்குனர் வர்கீஸ் தெரிவித்தார்.


போலீஸ் அறிவிப்பு: காலை 8 முதல் பகல் 12 மணி வரை பயிற்சி மேற் கொள்ளும் பகுதிகளான டாப்ஸ்டேஷன், தேவிகுளம் ரோடுகளில் பிற வாகனங்களை ஓட்டுபவர்கள், கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment