இந்த வருடத்திற்குள் மீண்டும் நம்பர் ஒன் ஆவதே என் லட்சியம்


கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 2010-ம் ஆண்டிலிருந்து முதலிடம் வகித்துவந்த செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 

இந்நிலையில் இந்த வருடத்திற்குள் டென்னிசில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதே என் லட்சியம் என ஜோகோவிச் கூறியுள்ளார்.
 
இதுபற்றி பேசிய ஜோகோவிச், ‘அது (முதலிடம் பிடிப்பது) என்னுடைய இலக்குகளில் ஒன்றாகும். அது என்னுடைய லட்சியம் எனலாம். 

இந்த வருட இறுதிக்குள் முதலிடத்தைப் பிடிக்க என்னால் முடியும். அதற்காக ஒவ்வொரு தொடர்களிலும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த நான் முயன்று வருகிறேன். நான் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். 

ஏனெனில் இப்போது சிறந்த வீரர்கள் பலர் முதலிடத்தை அடையும் போட்டியில் உள்ளனர்’ என்றார்.
 
கடந்த ஆண்டு (2011) டென்னிசில் உச்சத்தில் இருந்த ஜோகோவிச்சின் ஆதிக்கம் இந்த ஆண்டின் துவக்கத்திலும் நீடித்தது. 

ஆனால் தொடர்ந்து நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் தொடர்களில் முறையே நடால் மற்றும் பெடரரிடம் தோற்றதால் ஜோகோவிச் ஆதிக்கம் தற்போது சற்று மங்கிய நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment