இந்தியா-ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை- ஷேவாக் ஆடுகிறார்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டம் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. 

இந்த சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் இ மற்றும் “எப்” என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. “இ” பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளும் “எப்” பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

இன்று நடைபெறும் “சூப்பர் 8” சுற்று ஆட்டங்களில் “இ” பிரிவில் உள்ள இலங்கை- நியூசிலாந்து, இங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி “சூப்பர் 8” சுற்றின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

இந்த ஆட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதுவரை நடந்த 3 உலக கோப்பை போட்டியில் 2007-ம் ஆண்டு மட்டுமே இந்தியா முத்திரை பதித்தது. 

டோனி தலைமையிலான அந்த அணி அறிமுக உலக கோப்பையை கைப்பற்றியது. அதற்கு அடுத்த உலக கோப்பைகளில் “சூப்பர் 8” சுற்றோடு இந்தியாவின் வாய்ப்பு முடிந்துவிட்டது. 

இதனால் இந்தப்போட்டியில் “சூப்பர் 8” சுற்றில் சிறப்பாக ஆட வேண்டும். இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெறுவது ஆவசியமாகிறது. முதல் கட்டமாக ஆஸ்திரேலியாவை நாளை வீழ்த்துவது அவசியம். 

நாளைய போட்டிக்கான வீரர்கள் தேர்வு கேப்டன் டோனிக்கு சவாலாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 பேட்ஸ்மேன் மற்றும் 5 பவுலர் பார்முலா பலனை கொடுத்தது. ஹர்பஜன், பியூஸ் சாவ்லா ஆகியோர் சிறப்பாக பந்து வீசியதால் வீரர்கள் தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படும். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட அஸ்வின் இடம் பெறுவார். ஹர்பஜன் 4 விக்கெட் கைப்பற்றி இருந்ததால் அவரது தேர்வு தவிர்க்க இயலாது. அஸ்வின், ஹர்பஜன் இரண்டு பேரும் தேர்வு செய்யப்படும் போது பியூஸ்சாவ்லா கழற்றி விடப்படலாம். அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் அணியில் இடம் பெறுவது அவசியமாகிறது. 

கடந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் முழு உடல் தகுதி இருந்தால் இடம் பெறுவார். அப்படி அவர் ஆடும் பட்சத்தில் 7 பேட்ஸ்மேன்களும், 4 பவுலருடன் இந்தியா களம் இறங்கும். அசோக் திண்டா கழபற்றி விடப்படுவார். 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு எடுபடவில்லை. இதனால் அவருக்கு இங்கிலாந்து போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர் வேண்டும் என்று டோனி நினைத்தால் தமிழக வீரர் பாலாஜி நீக்கப்படுவார். பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் திறமையை வெளிப்படுத்த வேண்டும். 

வீராட் கோலி, காம்பீர், ரோகித்சர்மா, ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். “லீக்” ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வென்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்திய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். 

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களான வாட்சன், வார்னர் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். இதுதவிர மைக்ஹஸ்சி, டேவிட் ஹஸ்சி, கிறிஸ்டியன், கேப்டன் பெய்லி போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், கும்மினஸ், ஸ்டார்க், ஹாக் போன்ற சிறந்த புவலர்களும் உள்ளனர். இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் தூர்தர்சன் ஸ்டார், கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

0 comments:

Post a Comment