ஷேவாக் நீக்கப்பட்டதால் ஆஸ்திரேலியா பயம் இல்லாமல் ஆடியது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷேவாக் நீக்கப்பட்டார். டோனியின் இந்த முடிவை முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- 

காம்பீர் சிறந்த தொடக்க வீரர். அவரும், ஷேவாக்கும் இணைந்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இந்த இருவரையும் பிரிப்பது என்ற முடிவு சரியானது அல்ல. 

ஷேவாக் எதிர் அணிக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். 6 அல்லது 7 ஓவர் அவர் களத்தில் இருந்தாலே ஆட்டத்தின் போக்கு மாறி விடும். 

ஷேவாக் ஒரு ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் எடுக்க கூடியவர். அவர் இல்லாததால் ஆஸ்திரேலியா எந்தவித பயமும் இல்லாமல் விளையாடி எளிதில் வெற்றி பெற்றது. 

2011 உலக கோப்பைக்கு பிறகு பியூஸ்சாவ்லா இந்திய அணியில் எந்தவித முத்திரையும் பதிக்கவில்லை. 

இதனால் அவர் எப்படி தேர்வு பெற்றார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. அவர் இடத்தில் அமித்மிஸ்ரா அல்லது ராகுல்சர்மாவை தேர்வு செய்து இருக்கலாம்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment