பெங்களூரு டெஸ்ட் - இந்தியா திணறல் துவக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில், இந்திய அணி "டாப் ஆர்டர் வீரர்களை இழந்து திணறி வருகிறது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில், வெற்றி பெற்ற இந்திய அணி , 1-0 என, தொடரில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு, 328 ரன்கள் எடுத்திருந்தது. வான் விக் (63), பிரேஸ்வெல் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.


"ஆல் அவுட்:

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு வான் விக் (71), பிரேஸ்வெல் (43), டிம் சவுத்தி (14) விரைவில் திரும்பினர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பிரக்யான் ஓஜா 5 விக்கெட் வீழ்த்தினார்.


திணறல் துவக்கம்:

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர் (2), புஜாரா (9) ஏமாற்றம் தந்தனர். சேவக் 43 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

0 comments:

Post a Comment