சென்னையில் 3-ந்தேதி ஐ.பி.எல். ஏலம்




6-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடக்கிறது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி ஓட்டலில் காலை 11 மணிக்கு ஏலம் தொடங்குகிறது. 

ஒப்பந்தம் முடிந்த வீரர்களும், ஐ.பி.எல். போட்டியில் ஆடாத வீரர்களும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

ஏலப்பட்டியலில் 101 வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக பாகிஸ்தான் வீரர்களும் இந்த முறையும் ஏலப்பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க், சமீபத்தில் ஓய்வு பெற்ற ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு அடிப்படை விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருவருக்கான ஆரம்ப விலை ரூ.2.12 கோடியாகும். இதில் கிளார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவலாம். 

அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணியில் ஆடினார். அவரை மீண்டும் எடுக்க அந்த அணி ஆர்வத்துடன் உள்ளது. இதேபோல கிளார்க்கை ஏலத்தில் எடுக்க மும்பை அணியும் தீவிரமாக உள்ளது. அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று இருந்தார்.

ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் விலை போவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. பாண்டிங் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடி இருக்கிறார்.

ஜான் போத்தா, கிப்ஸ், பிலாண்டர் (தென் ஆப்பிரிக்கா), ஆரோன் பிஞ்ச், ஹியூக்ஸ், மேத்யூ வாடே, ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், பொலிஞ்சர் (ஆஸ்திரேலியா), டாரன் பிராவோ, டாரன்சேமி (வெஸ்ட்இண்டீஸ்), ரவி போபரா (இங்கிலாந்து), மார்ட்டின் குப்தில், ரைடர் (நிïசிலாந்து), சண்டிமால், உபுல் தரங்கா, பிரசன்னா ஜெயவர்த்தனே (இலங்கை) போன்ற முன்னணி வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இந்திய வீரர்ளில் ஆர்.பி.சிங், அபிஷேக் நாயர், மன்பிரீத் கோஸ், சுதிப் தியாகி ஆகியோரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment