3-வது ஒருநாள் கிரிக்கெட் - டோனி பங்கேற்பது சந்தேகம்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 

இதில் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது. 

தொடரை இழந்த நிலையில், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். இதற்காக இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் காயம் காரணமாக 3-வது போட்டியில் கேப்டன் டோனி பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. 

அவர் விளையாட முடியாத பட்சத்தில் அவருக்குப்பதில் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. அவரை உடனடியாக டெல்லிக்கு வரும்படி தேர்வுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. 

0 comments:

Post a Comment