தோனி அபாயகரமான பேட்ஸ்மேன்


இந்தியாவுடனான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது குறித்து அந்த அணியின் கேப்டன் குக் கூறியதாவது:- 

தோனியும், ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. 

இருவரும் எந்த பந்து வீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் அதிரடியாக ஆடினார்கள். 

தோனி கடைசி வரை நின்று ஆடினால் கஷ்டம்தான். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன். 

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக ஆடியதை பார்த்து இருந்தேன். 

இதேபோல ஜடேஜாவும் சிறப்பான வீரர் ஆவார். அவர் முதல்தர போட்டியில் டிரிபிள் செஞ்சூரி அடித்து முத்திரை பதித்து இருக்கிறார். 

கடைசி 10 ஓவரில் நாங்கள் 100 ரன்னுக்கு மேல் கொடுத்துவிட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

இந்திய அணி வீரர்கள் இந்தப்போட்டியில் அனைத்து வகைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment