இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா


இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியதாவது:-

இந்திய அணி இர்பான் பதானுக்கு அடுத்து ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் இல்லாமல் திணறி வந்தது. ஆனால் இப்பொழுது அந்த இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா பொருத்தமாக வந்துள்ளார். 

இந்திய அணியை சமநிலையில் கொண்டு செல்பவர்களில் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர். மிக சிறப்பாக விளையாடுகிறார். 

புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு 10 ஒவர்கள் பவுலிங் செய்ய நாம் யுவராஜ் சிங் மற்றும் பகுதி நேர பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தினோம். ஆனால், இந்த புதிய விதிப்படி சிறந்த பந்து வீச்சாளராக யுவராஜ் சிங் நிலைக்க இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. 

டாப் ஆர்டரில் உள்ளவர்கள் சிறப்பாக விளையாடவேண்டும். ஜடேஜா சிறிது நேரம் பேட் செய்ய முடியும். ஆனால், அதேநேரத்தில் அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லை. 

அவர் 7-வது வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். அதனால் அவர் மென் மேலும் சிறப்பாக விளையாடுவார்.

இவ்வாறு டோனி கூறினார்.

0 comments:

Post a Comment